22 மே 2014

நெருப்பெரிந்த நிலத்தின் பூக்கள்

மண்ணின் தேவதைகள்
மௌனத்தைப் பேசிக்கொண்டிருக்கையில்..
அவை,
'மாலை' க்கான ஆசையில்
மலர்ந்து கிடக்கிறதென
மொழி பெயர்த்துகொண்டிருப்போரே..
புரிந்துகொள்ளுங்கள்...
மலைகளுக்குள் மட்டுமல்ல
இங்கு
பூக்களுக்குள்ளும்
பூகம்பமுண்டு.
இவை,
நெருப்பெரிந்த நிலத்தில்
புதையுண்ட,
விதையிலிருந்தேறி
வந்த பூக்கள்!