ஆதலினால்


என் உணர்வுகளின் குளத்தில், யார் கல்லை வீசி விட்டு சென்றது? நினைவுகள் கூட நீயுட்டனின் விதிக்கு உட்படும் என்று அன்று எண்ணத்தோன்றவில்லை. நடந்தவைகள் முடிந்தவை என்று தான் எண்ணி இருந்தோம். யாருக்கு தெரியும்? காய்ந்து போனதென எண்ணிய விதைகள், நேற்றைய துமியால் துளிர் உமிளுமென்று? காயங்களை ஆற்றவாவது இங்கு முற்றுப்புள்ளிகளை மறுதலிக்கவேண்டியுள்ளது. எல்லோரது சுகமும், நேர்சிந்தனைக்காகவும்; நிறுத்தங்களை மறுத்து, நிச்சயமே இல்லாதவைகள் நடக்க கூடும் எனக் கூறும் யோதிடர் ஆகவேண்டியுள்ளது. எல்லாமும் போல, நானும் இயங்குதலில் இருக்க பிரியப்படுவதால் எனக்கு "ஆதலினால்" அவசியமாக உள்ளது. நிசப்தம் அச்சமாக உள்ளதால், மௌனங்களை முடிச்சிட்டு நகர்த்த இவ் "ஆதலினால்" எனக்கு உதவக்கூடும்.