29 ஜூன் 2014

திசைகள் தொலையாத திருப்பங்கள் வேண்டும்

Photo I T.Mayuran I Kandy I 2013
வளைவுகளின் அடுத்த பக்கத்தில், இயற்கை எதை எழுதி வைத்துள்ளதென்பதை எதிர்வு கூறும் வல்லமை எப்போது வரும்? 

இது, நண்பனின்  வலி நிறைந்தவோர் திருப்பம்பற்றி அறிந்துகொண்ட நாள். விடைகளே அற்ற கேள்விகளை, வாழ்க்கை தன் பாதையின் இடையில் பெரிய தடைகளாய்ப் போட்டு வைத்துள்ளது. எந்தப் பயணமும் இதுவரை நேர்கோட்டில் நிகழ்ந்ததில்லை என்றபோதும், எதிர்பார்க்க முடியாத வளைவுகளில் வாழ்க்கையின் மறு பகுதியை தரிசிக்கும் போது மனது கனக்கிறது.

திருப்பங்களின் மறுகோடியில் விருப்பங்களேயற்ற வலிகள் காத்திருந்தாலும், திசைகளைத் தொலைக்காத அவர்களின் பயணத்திற்காய் பிரார்த்திக்கத் தோன்றுகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக