18 பிப்ரவரி 2025

எம்மைக் கண்டெடுப்போம்

 எல்லோரும் கலைத்துக்கொண்டோடும் எல்லாமும் காணமல் போன நாள் ஒன்றில், எம்மைக் கண்டெடுப்பதற்கான கணம் ஒன்று கிடைக்கும்.

4.5 பில்லியன் ஆண்டுகளாய் வாழும் பூமியின் ஏதோ ஒரு படிமம் எம்மைப் பார்த்து புன்னகைக்கும். இங்கே நீளமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலவும், காற்றும், நதியும், செடியும் எமக்குள் புதைந்து போய்க்கிடந்த மகிழ்ச்சியின் மேல் படைகளை உரசும்.

இயற்கையின் உறவு எம் அத்தனை அணுக்களையும் அணைக்கும் கணத்தில் நாம் மீண்டும் ஒரு முறை பிறந்திருப்போம்.

இப்போது சாகா வரம் பெற்ற மகிழ்ச்சியின் கரங்களில் நிஜமான நாமாக நிறைந்திருப்போம்.