25 டிசம்பர் 2010

காத்திருக்கும் காகம்



இது எலெக்சன் காலம்,
இந்த கல்லை
எந்த பாத்திரத்தில் போடுவது?
இதை போட்டால் ..
தண்ணீர் அல்ல,
தேனே வரும் என்கின்றனர்,
பால் வரும் பாக்கியமும் உள்ளதாம்!
பாகே வரும் என்றால் பாருங்களேன்!!

உங்களை போல அல்ல; நண்பர்களே,
நரியிடம் வடை இழந்த நான்
இப்போதெல்லாம்...
வார்த்தைகளை விட
வாழ்கையை நம்பத்தொடங்கி விட்டேன்,
தாகத்தை விட -எனக்கு
தண்ணீரே முக்கியமாக உள்ளது!

...................................
Photo: Eluvathivu Jetty 18.02.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக