Photo I T.Mayuran I Chennai I 2006 April |
வண்ண வண்ணமாய்
நிறைந்துகொண்டிருக்கிறது சுவர்கள்!
எங்கள்,
வயிறுகள் மட்டும்.........
சுவர்களில் இருந்து
பார்த்துக்கொண்டிருங்கள்,
சுடலையாகிறது
எங்கள் வாழ்வு!
வண்ணங்கள் கொடுத்தனுப்பும்
நீங்கள்,
எங்கள்
கிண்ணங்களை மறந்ததேன்?
ஜனங்கள் அல்ல,
"நாயகர்களே"
ஆள்வதாக,
ஆகியிருக்கிறது - எங்களின்
ஜனநாயகம்!
பஞ்சமா பாதகங்களையும் செய் என்று மறைமுகமாக சொல்வதுதானே உங்கள் ஜனநாயகம் என! அன்றைய மூத்த சுயநலமற்ற கொமினிஸ்ட்கள் சொன்னது மெய்தானோ?
பதிலளிநீக்கு