22 டிசம்பர் 2010

ஜன-நாயகம்

Photo I T.Mayuran I Chennai I 2006 April 

வண்ண வண்ணமாய்
நிறைந்துகொண்டிருக்கிறது சுவர்கள்!
எங்கள்,
வயிறுகள் மட்டும்.........

சுவர்களில் இருந்து
பார்த்துக்கொண்டிருங்கள்,
சுடலையாகிறது
எங்கள் வாழ்வு!

வண்ணங்கள் கொடுத்தனுப்பும்
நீங்கள்,
எங்கள்
கிண்ணங்களை மறந்ததேன்?

ஜனங்கள் அல்ல,
"நாயகர்களே"
ஆள்வதாக,
ஆகியிருக்கிறது - எங்களின்
ஜனநாயகம்!

1 கருத்து:

  1. பஞ்சமா பாதகங்களையும் செய் என்று மறைமுகமாக சொல்வதுதானே உங்கள் ஜனநாயகம் என! அன்றைய மூத்த சுயநலமற்ற கொமினிஸ்ட்கள் சொன்னது மெய்தானோ?

    பதிலளிநீக்கு