22 டிசம்பர் 2010

சாம்பல் எழுதும் சரித்திரம்

Photo I T.Mayuran I Allaippitty I 2010 



கடல் இல்லாமல்
அலை!
தலை இல்லாமல்
தவம்!
வரங்களுக்காக அல்ல - உங்கள்
சிரங்களுக்காக!!

தறித்துவிட்டு சென்றவனே
இது கேள்..
ஒளித்தொகுக்க -என்னில்
பச்சையம் இல்லை -இருந்தும்
வீச்செறிந்து விரையும் விதைகளுக்கு -நான்
கர்ப்பப்பை!

இங்கே - நீ
பறித்தது
கொப்புகளை அல்ல- உன்
வரும்காலத்தின் வேர்களை!
நான் வளர்விப்பது
செடிகள் அல்ல, சந்ததிகள்!

உறுப்பில்லை என்ற கவலையில்
உலகு வெறுத்திருக்கும் உறவுகளே - இங்கே
உயிர் இல்லாமல் தொடரும்
பிரசவம் பார்த்திர்களா?

இது..
அழித்தவனை
காக்கும் கடும் தவம்,
எரித்த நெருப்பையே,
குளிர்விக்கும் பிரயத்தனம்!
முடிந்த வரலாற்றுக்கு -மீண்டும்
எழுதும் முன்னுரை!!

1 கருத்து: