12 நவம்பர் 2012

தீ தெறிக்கும் பொறி


தீயன தீயில், தீய்ந்து தேய்ந்திடும் 
தீபநாள் இன்றென  நம்புவோம்!
தீயதை கொய்திடும் கொழுந்து தீ அது 
நெஞ்சினில் உள்ளதாய்  கொள்ளுவோம்!! 

கேடை,  கடவுளார் கொய்தபின் - இன்னமும் 
கெட்டவர் வாழ்கிறார்  கண்டுகொள்!
நரபலி கொண்ட  நம் சூரரை - கோவிலுள் 
கடவுளார் விட்டதேன்? என்றுசொல்!

நல்லதை எண்ணி எம், நாட்களை கடத்த இப் 
பண்டிகை பலன் தரும் உண்மையே, - பெரும் 
தீமையை எரிக்குமத் தீயினை தெறிக்க நம் 
முயற்சி தான் பொறி தரும் முன்னையே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக