தீயன தீயில், தீய்ந்து தேய்ந்திடும்
தீபநாள் இன்றென நம்புவோம்!
தீயதை கொய்திடும் கொழுந்து தீ அது
நெஞ்சினில் உள்ளதாய் கொள்ளுவோம்!!
கேடை, கடவுளார் கொய்தபின் - இன்னமும்
கெட்டவர் வாழ்கிறார் கண்டுகொள்!
நரபலி கொண்ட நம் சூரரை - கோவிலுள்
கடவுளார் விட்டதேன்? என்றுசொல்!
நல்லதை எண்ணி எம், நாட்களை கடத்த இப்
பண்டிகை பலன் தரும் உண்மையே, - பெரும்
தீமையை எரிக்குமத் தீயினை தெறிக்க நம்
முயற்சி தான் பொறி தரும் முன்னையே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக