24 மார்ச் 2014

கட்டு

Photo I T.Mayuran I Kilinochchi I 2012 



நீங்கள் இளநீருக்கான தாகத்தில் இருப்பதாய்ச் சொன்னீர்கள், 
நாங்கள் எங்களைக் கட்டிவைக்க சம்மதிக்க, 
அவர்கள் உங்களுக்காய் மரம் ஏறினார்கள்.
நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்க, 
பறித்த இளநீர் முழுக்க பருகி இரசித்தீர்கள்,
உங்கள் இளநீருக்காய்,
மீண்டும் மீண்டும் இரையான பொச்சுக்கள்
எங்கள் அருகிலேயே கட்டிவைக்கப்பட்டன.
நாங்கள் எல்லோரையும் உயர்த்தும் ஏணிகள் என்று முருக்கேற்றினார்கள்,
ஏறியவர்களும், பருகியவர்களும் போய்விட - இன்னும் கட்டுக்கள் அவிழாமல் நாங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக