தரிப்பு!
நிறத்தை மாற்றியது வானமே தான். மனதில் மட்டுமேன் மகிழ்ச்சி? காலை, நீலமாய் இருந்த இந்த நீள வானில், மஞ்சளைப் பூசியது சூரியன் அல்லவா? இருந்தும், தொலை தூரத்தில், தொடர்பே இல்லாமல் அலைந்து கொண்டிருந்த மனதில் மகிழ்ச்சியை
உருக்கியது எது?
உருக்கியது எது?
தரிப்பு!
உலர்ந்து போன ஓவ்வொரு பொழுதுகளுக்கும் அடுத்ததாய் ஒரு மஞ்சள் மாலை இருக்கும். வானம் மலரும், ஆதலினால்.. மனமும் மகிழ்ந்தே தீரும். அதுவரை.. அடுத்த உயிர்ப்புக்கு இடையில், இந்த வானம் என்னை எல்லோருக்கும் கூறச் சொல்லிய ஒற்றை வார்த்தை
தரிப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக